Monday 5 November 2018

திருவாசகம்-திருப்புலம்பல்





உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங்
கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே.   (
பாடல் 3)


திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற, கூத்தப் பெருமானே! உறவினரை யான் விரும்புவேனல்லேன்; வாழ்வதற்கு ஊரை விரும்புவேன் அல்லேன்; புகழை விரும்புவேன் அல்லேன்; கல்வியை மட்டும் கற்றவரை யான் விரும்பமாட்டேன். கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும். உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிக்கண் கன்றையுடைய பசுவினது மனத்தைப் போலக் கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன்.

No comments:

Post a Comment