Friday 4 January 2019

பாவங்களின் 42 வகை.வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்



ராமலிங்க அடிகளார் வள்ளலார், பாவங்கள் என்று 42 வகையான விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறார்.

1   நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
   
2    வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
   
3    தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
   
4    கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
   
5    மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
   
6    குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
   
7    ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
   
8    தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ
   
9    மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
   
10    உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
   
11    களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
   
12    பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
   
13    ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
   
14    வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
   
15    வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
   
16    பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
   
17    இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
   
18    கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
   
19    நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
   
20    கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
   
21    கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
   
22    காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
   
23    கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
   
24    கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
   
25    குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
   
26    குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
   
27    கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
   
28    பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
   
29    பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
   
30    கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
   
31    ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
   
32    கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
   
33    அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
   
34    குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
   
35    வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
   
36    பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
   
37    பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
   
38    ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
   
39    சிவனடியாரைச் சீறி வைதேனோ!
   
40    தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
   
41    சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
   
42    தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
   
43    தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
   
44    என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

இந்த பாவங்களை கூடுமானவரை எதையும் நாம் செய்யாமல் இருப்போம்...

                                ↫  திருச்சிற்றம்பலம்  ↬



No comments:

Post a Comment