Friday 19 July 2019

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல்கள்...




 
1. மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
    மிதியாமை கோடி பெறும்


பாடல் விளக்கம்:- 
தன்னை மதியாதார் வீட்டிற்கு செல்லாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...


2.  உண்ணீர்உண் ணீரென் றுபசரியார் தம்மனையில்
     உண்ணாமை கோடி பெறும்



பாடல் விளக்கம்:- 
விருந்தினரை சரியாக உபசரிக்காதவர் வீட்டில் உணவு அருந்தாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... 

3.  கோடி கொடுத்ததும் குடிப்பிறந்தார் தம்மொடு
     கூடுவதே கோடி பெறும்


பாடல் விளக்கம்:-
கோடி செல்வம் செலவு செய்து உயர்ந்தோர் நட்பு பெற்றாலும் அது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... 


4.  கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
     கோடாமை கோடி பெறும்


 பாடல் விளக்கம்:-
எவ்வளவு கோடி செல்வம் பெற்றாலும் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...
 

No comments:

Post a Comment